ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சர்வகட்சி மாநாட்டை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.…

45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு வரி விதிக்க IMF பரிந்துரை

மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுகின்றவர்களுக்கு வரியை அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்தத் தகவலை நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில்…

நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது!

பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் சுயேட்சைக் குழு உறுப்பினர் அமரதாஸ ஆனந்த என்பவர் தவிசாளராக ஆட்சி செய்து வந்த நிலையில் 14 குற்றச்சாட்டுக்கள் பெருன்பான்மை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு 2023ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமையினால் வறிதான தவிசாளர் வெற்றிடத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்குறித்த…

தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு உதவிகளை வழங்குமாறு – மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை!

தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு உதவிகளை வழங்குமாறு கோரி மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான பணத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

மின்சார அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை)…

சீனாவின் உத்தரவாதம் போதுமானதாக இல்லை

இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பு செய்வதற்காக சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (EXIM) தமக்கு செலுத்தப்பட வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை இரண்டு வருடங்களுக்கு அறவிடாமல் இருப்பதனூடாக, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ள…

கரு ஜயசூரியவிற்கு வழங்கப்படவுள்ள அதி உயர் விருது

முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவிற்கு அதி உயர் விருது வழங்கப்பட உள்ளது. இலங்கையில் வழங்கப்படும் அதி உயர் விருதான ஶ்ரீலங்காபிமானய என்னும் விசேட விருதே இவ்வாறு வழங்கப்பட உள்ளது. இந்த அதி உயர் விருதினை கரு ஜயசூரியவிற்கு வழங்க ஜனாதிபதி…

பரீட்சை எழுத சென்று கொண்டிருந்த மாணவி மீது, ஆசிட் வீச்சு

கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில்…

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு அஞ்சலி — (திருக்கோவில் நிரருபர்)

(கனகராசா சரவணன்) திருகோணமலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (24) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி…

அரச ஊழியர்களுக்கு நாளை சம்பளத்தை வழங்க நடவடிக்கை..!

அரச ஊழியர்களுக்கு நாளைய (25) தினத்திற்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத…