401 பில்லியன் கடன்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 51% பங்குகளை அரசாங்கம் வைத்துக்கொண்டு எஞ்சிய 49 % பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கன் கேட்டரின் மற்றும் விமான நிலைய முகாமை உள்ளிட்ட துறைகளில் 49 % பங்குகளை இவ்வாறு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மொத்த கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் இது இலங்கையின் பண மதிப்பில் சுமார் 401 பில்லியன் ரூபாய் ஆகும்.