Author: Kalmunainet Admin

தடுப்புக்காவலில் இருந்த பிள்ளையான்: சட்ட மா அதிபரின் ஆலோசனை வரும் வரை விளக்கமறியல் நீடிப்பு

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத்துறையின் பொறுப்பில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இன்று (02) கல்கிசை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.2006 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஒருவர் காணாமல்…

ஹோர்முஸ் நீரிணை வழி கப்பல் பயணம் தொடர்பாக ஈரான் வெளியிட்ட அறிவித்தல்

ஹோர்முஸ் நீரிணை வழியாக ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை…

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததான முகாம்

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததான முகாம் பாறுக் ஷிஹான் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானம்…

நாவிதன்வெளி பிரதேசத்தில் மற்றுமொரு வைத்தியர்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் மற்றுமொரு வைத்தியர். கே.எஸ்.கிலசன் நாவிதன்வெளி பிரதேசத்தின் 15ம் கிராமத்திலிருந்து இரண்டாவது வைத்தியர் எனும் பெருமையை பெறுகிறார் அன்பழகன் பிரஜித். உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்டத்தில் 27 வது இடத்தைப்…

தம்பலவத்தையிலிருந்து பொறியியல் துறைக்கு தெரிவான டிவான்.

கே.எஸ்.கிலசன். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான மண்டூர் தம்பலவத்தை கிராமத்தை சேர்ந்த போசராசா டிவான் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது இடத்தினையும் தேசிய ரீதியில் 231வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளார். இவர் மட்டக்களப்பு…

இன்று (01) சிட்னி முருகன் ஆலய தாமரை தடாகத்தில் தீர்த்தோற்சவம் 

( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவத் திருவிழா இன்று (1) புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலையிலே ஆயிரக்கணக்கான இலங்கை அடியார்கள் புடை சூழ ஆலய தாமரைத்தடாகத்தில்…

பாண்டிருப்பில் பல வீதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி கிடக்கின்றன – அகற்றுவதற்கு கல்முனை மாநகரசபை நடவடிக்கை எடுக்குமா ?

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதி உட்பட பல வீதிகளில் திண்மக்கழிவுகள் சீராக அகற்றப்படாததால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். பல வீதிகளில் திண்மக்கழிவுகள் குவிந்து காணப்படுகிறன. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும், சூழல் மாசுபடும் நிலையும் காணப்படுவதாகவும். திண்மக்கழிவுகளை…

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை

சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் தீவிர விசாரணை பாறுக் ஷிஹான் வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக உயர்தர மாணவர்கள் ஐவர் சாதனை

வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக உயர்தர மாணவர்கள் ஐவர் சாதனை ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமத்தில் இருந்து இம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பெறுபேறுகளின்படி, வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், ஒரு மாணவன்…

பெரியநீலாவணை மாணவி பத்மநாதன் வைஷ்ணவி (கலைப்பிரிவு) மாவட்டத்தில் முதலிடம்

பெரியநீலாவணையைச் சேர்ந்த மாணவி பத்மநாதன் வைஷ்ணவி கலைப்பிரிவில்2025 உயர்தர பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் முதல்தர சித்தியை பெற்றுள்ளார். இவர் பத்மநாதன் சிவகுமாரி தம்பதிகளின் புதல்வியாவார்