Author: Kalmunainet Admin

பிரதமராக ஹரனி அமரசூரிய பதவியேற்றார்!

பிரதமராக ஹரனி அமரசூரிய பதவியேற்றார்! இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரனி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்று முன்னர் பதவியேற்றார். நீதி, கல்வி, தொழில் , கைத்தொழில் , விஞ்ஞான & தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் அமைச்சுகளும்…

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல்!

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல்! முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மட்டும் இலங்கையில்…

நாடாளுமன்றம் இன்றுடன் கலைக்கப்படலாம்?

புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அமைச்சரவை நியமனத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் இனி எந்த எம். பி பதவியும் வகிக்கப்போவதில்லை என அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன தனது பொறுப்புக்களில் இருந்து நீங்கினார்!

எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பதவியிலிருந்து நீங்கி விட்டதாகவும் தன்னிடம் இருந்த அரச வாகனங்கள் மற்றும் அலுவலகத்தை நேற்று (22) ஒப்படைத்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் தனது பொறுப்பில் இருந்த நிறுவனங்களை 2022 இல் இருந்த…

உலக நாடுகளுடன் கைகோர்த்து, அனைவருடனும் ஒன்றிணைந்து நாட்டை வளப்படுத்துவேன் :ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் – பதவியேற்ற பின்பு ஜனாதிபதி அநுர தனதுரையில் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க – பதவிப் பிரமாணத்தின் பின்னர் சனாதிபதி அலுவலகத்தில் தேசத்திற்கு ஆற்றிய உரை சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களே, ஏனைய மத குருமார்களே, வெளிநாட்டு தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே, பிரதம நீதியரசரே, அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு அதிதிகளே, எமது நாட்டின்…

பெரியநீலாவணையில் புதிய மதுபான சாலை : மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்! புதிய ஜனாதிபதி அவர்களே இது உங்கள் கவனத்துக்கு.

பெரியநீலாவணையில் புதிய மதுபான சாலை : மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்! புதிய ஜனாதிபதி அவர்களே இது உங்கள் கவனத்துக்கு. பெரிய நீலாவணையில் புதிய மதுபான சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இன்று குறித்த…

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவேற்புக்கு ஆசி வேண்டி கல்முனை ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடு

புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று இன்று ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆசி வேண்டி தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் பூசை வழிபாடு கல்முனை ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர்…

ஜனாதிபதி செயலகத்திலிருந்து விடை பெற்றார் ரணில்

புதிய ஜனாதிபதிக்கு இடம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனது உடைமைகளுடன் வெளியேறினார். ஜனாதிபதிக்குரித்தான அனைத்து வாகனங்களையும் கையளித்த நிலையில் அவர் தனது உத்தியோக இல்லத்துக்குச் சென்றார்.