நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும். பேராசிரியர் ரெஸ்னி காசிம் ஊடகங்களுக்கு வழங்கிய நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு சித்த மருத்துவத்தில் உள்ளது

நீரிழிவு நோயாளிகளின் கால்காயங்கள் புற்றுநோயை விட ஆபத்தானவை என பேராசிரியர் ரெஸ்னி காசிம் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துரையைத் தொடர்ந்து, அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் அவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

இக்கடிதத்தில், சித்த மருத்துவத்தில் நீரிழிவு காயங்களுக்கு பல நூற்றாண்டுகளாக பயனுள்ள மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளன என்பதையும், அவை பல நோயாளிகளுக்கு உறுப்பு இழப்பைத் தவிர்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலிகை மருந்துகள், வெளிச்சிகிச்சைகள், நரம்பு மற்றும் இரத்த ஓட்டக் கோளாறுகளை சரிசெய்யும் பல வழிமுறைகள் மூலம் பல நோயாளிகள் குணமடைந்துள்ளனர். சிலர் கால் அகற்றப்படாமல் முழுமையாக குணமடைந்துள்ளனர் எனக் கடிதம் வலியுறுத்துகிறது.

மேலும், சித்த மருத்துவ நிபுணர்களும் மேற்கத்திய மருத்துவ நிபுணர்களும் இணைந்து செயல்பட்டால் நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்க இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நோயாளிகளில் சுமார் 66% பேருக்கு ஐந்து ஆண்டுகளில் மறுமுறை நீரிழிவு கால்காயங்களால் மற்றொரு கால் இழக்கும் அபாயம் உள்ளமைக்கு சிறிய காயங்களிலிருந்தே சித்த சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் கடுமையான விளைவுகளைத் தவிர்க்கலாம்

இலங்கையில் சுமார் 20 இலட்சம் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களுக்கு ஒருங்கிணைந்த (Integrated) சிகிச்சை அணுகுமுறை மூலம் உறுப்புகள் இழக்கும் அபாயத்தை பெரிதும் குறைக்க முடியும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சித்த மருத்துவம் நவீன மருத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதோடு, இந்த பிரச்சினை குறித்து மேலும் கலந்துரையாட தாங்கள் பேராசிரியர் ரெஸ்னி காசிம் அவர்களுடன் நேரில் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் கௌரவ ஞனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், பிரதி சுகாதார அமைச்சர், ஆயுர்வேத ஆணையர் நாயகம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன
தற்போது நீரழிவு நோய் வேகமாக வளர்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதை சேர்க்க சொல்லி அனுப்பியுள்ளார்கள்