Author: Kalminainet01

போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இலங்கை வரும் உக்ரேன் கப்பல்

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு 49500 தொன் கோதுமை ஏற்றிய கப்பல் உக்ரைன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாக கூட்டு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர சோளம், கடலை, சூரியகாந்தி விதைகளை ஏற்றிச் செல்லும் மேலும் மூன்று கப்பல்கள் மூன்று நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.…

மாகாண அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த அரசுக்கு ஒரு வார கால அவகாசம் : தமிழ் கட்சிகள் தீர்மானம்

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒருவார காலம் அவகாசம் வழங்குவதென்றும், அந்த கால அவகாசத்திற்குள் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சை தொடரப்போவதில்லை என தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (09) மாலை கூடிய…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற நரம்பியல் நோயாளர் முகாமைத்துவ செயலமர்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 05.01.2023 – 06.01.2023 தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நரம்பியல் உபாதை நோயாளர் முகாமைத்துவம் சம்பந்தமான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. அருணி வேலழகன் (நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் – ஜெர்மனி)…

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு நாளை கூடுகிறது

(எம்.எம்.அஸ்லம்) உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு நாளை செவ்வாய்க்கிழமை (10) கூடவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நாளை பிற்பகல்…

ஈரோஸ் வடக்கு கிழக்கு மலையகத்தில் தனியாக தேர்தலில் களமிறங்கும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் அறிவிப்பு

(கனகராசா சரவணன்) மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) வடக்கு கிழக்கு மலையகம் போன்ற பிரதேசங்களில் உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துவமாக களமிறங்கும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.…

தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் புதிய சின்னத்தில் போட்டியிடும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் புதிய சின்னத்தில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டால் பொது சின்னம் ஒன்றை தெரிவு செய்யவுள்ளதாக ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்…

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து தாய்லாந்து – இலங்கைக்கு இடையில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இன்றைய தினமும் நாளைய தினமும் கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.…

3 மாகாணங்களில் மட்டும் முட்டைகள் 53 ரூபாய்க்கு விற்பனை

3 மாகாணங்களில் இன்று முட்டைகள் தலா 53 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு சென்று முட்டைகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். ஆனால்,…

தமிழ் மக்கள் தீர்வுக்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணில் திரளவேண்டும் என கோரி மட்டக்களப்பில் 4 நாளாக ஆர்ப்பாட்டம்

(கனகராசா சரவணன்) ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வின வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (8…

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியல் திரளவேண்டுமெனக் கோரி பாண்டிருப்பில் போராட்டம்…!

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியல் திரளவேண்டும் என கோரி, அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை ஆலய முன்றலில் 6 ஆம் திக்தி…