கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 05.01.2023 – 06.01.2023 தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நரம்பியல் உபாதை நோயாளர் முகாமைத்துவம் சம்பந்தமான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக Dr. அருணி வேலழகன் (நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் – ஜெர்மனி) அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. R. முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது நரம்பியல் உபாதை ஏற்படும் காரணங்கள், இந்நிலைமைகள் ஏற்படாமல் எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம் இந்நிலை ஏற்பட்டால் எவ்வாறு பராமரிப்பு வழங்க வேண்டும் என்னென்ன விடயங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் இலகுவான எளிமையான நடைமுறையில் அனைவருக்கும் விளங்கக்கூடிய விதத்தில் Dr.அருணி வேலழகன் (நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்) அவர்களினால் விளக்கங்கள் மற்றும் செயன்முறைப்பயிற்சிகளும் வழங்கப்பட்டது.