Category: இலங்கை

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம்

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணப்படுமென தோ்தல்…

23 ஆம் திகதி விசேஷட விடுமுறை

எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவுக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும்!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அஞ்சல் மூலமான வாக்குகளாகவோ அல்லது பதிவான வாக்குகளின் மூலமாகவோ முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது வாக்கு எண்ணும்…

வாக்கெடுப்பு சுமுகமாக நிறைவு :பரவலாக சுமார் 70 வீதம் பதிவு

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில்…

வாக்க்குப்பதிவு விபரம் -2PM

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி இன்று பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட…

பொது வேட்பாளர் பெயரில் நேற்று வெளியான துண்டுப்பிரசுரம் – மிகக் கேவலமான செயல் -பா. அரியநேத்திரன்

ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனின் பெயரில் நேற்று வெள்ளிக்கிழமை (20.09.2024) இரவு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அன்பார்ந்த தமிழ் வாக்காளப் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம். இம்மடல் மூலம் திறந்த…

சித்திரப் போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலய 8 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு!

அகில இலங்கை பாடசாலை சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிசெய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி கெளவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு. கு.திருச்செல்வம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினை…

சமூக ஊடகங்கள் பாவிக்கும் மக்களுக்கான எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரசார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள்…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்! அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்கள்…