Category: பிரதான செய்தி

இலங்கை தேயிலை அதிக விலைக்கு விற்பனை

2022 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் தேயிலை அனைத்து ஏல விற்பனை நிலைகளிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேயிலை விற்பனை இதன்படி கிலோகிராம் ஒன்று சராசரியாக 1,599.49 ரூபாவாக விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டு அதே காலப்பகுதியில்…

மீண்டும் சொல்ஹெய்மின் பங்களிப்பு ரணிலின் அழைப்பில் இங்கு வருவார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கட்டி எழுப்புவதற்காக வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக ஆராய்வதற்காகவே அவர்…

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – 58 இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின்படி, வெளிநாடுகளில் 58 இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி, இராணுவ அதிகாரிகளின் பட்டியல் தொடர்பான பிரேரணையை 31 நாடுகளுக்கு அனுப்ப…

ஒக்டோபர் 10ம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு!

எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீலாத் என்பதன் காரணமாக…

உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் திகதிகளில் மாற்றம்

2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றினை நடத்தும் திகதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் திகதிகள்…

சுசந்திக்காவின் பெயரில் முத்திரை வெளியிடப்பட்டது

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையிட்டு நினைவு முத்திரையுடன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருமதி சுசந்திகா ஜயசிங்கவின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையும் வெளியிடப்பட்டது. ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, முத்திரையையும் முதல் நாள் கடித உறையையும் சுசந்திகாவிடம்…

மத்திய வங்கியின் கையிருப்பு வீழ்ச்சி – 400 மில்லியன் டொலர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்

இலங்கை மத்திய வங்கியின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி வசதியும் இதில் உள்ளடங்குவதாகவும் மத்திய வங்கி…

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நிலைமை குறித்து அறிக்கைஅண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு

தொலைபேசி நிறுவனங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தினை அதிகரித்துள்ளன. 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட…

‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தியது – ட்விட்டர்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை திருத்தும் (எடிட்) வசதி இருக்கிறது. இதன் மூலம், பதிவில் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம்.…