உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் பணிகள் இன்று (18) ஆரம்பமாகின்றன.

இன்று (18) காலை 8.30 மணி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.