Category: பிரதான செய்தி

ரூபாவின் பெறுமதி காலத்திற்கு காலம் மாறுபடும் என அரச தரப்பு தெரிவிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி காலத்திற்கு காலம் மாறுபடும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் செயற்கையான முறையில் ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வரும் பின்னணியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் விற்பனை குறைந்து வருவதால், பெட்ரோல் நிலையங்களின் மாதாந்திர வருமானம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வருமானம் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாள கபில தெரிவித்துள்ளார். முன்னர் பெட்ரோல்…

கனேடிய – அவுஸ்திரேலிய தூதுவர்களிடம் இரா.சம்பந்தன் வலியுறுத்தல்!

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தச் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (16.03.2023) இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியத்…

இலங்கைக்கு சவூதி அரேபியா வழங்கிய அன்பளிப்பு!

50 தொன் எடைகொண்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு, சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த அன்பளிப்பு சவூதி அரேபிய மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (16.03.2023) கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் சவூதி…

டொலரின் பெறுமதி 300 ரூபாய் வரையாவது குறைய வேண்டும்! பேராசிரியர் நவரத்ன பண்டா

தற்போது, ​​நாட்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் நமது செலவு குறைவு. எங்களின் ஏற்றுமதி வருமானம் எஞ்சியிருக்கிறது. வட்டி விகித அதிகரிப்பினாலும் கூட டொலர்களை கோரும் அளவு குறைகிறது என களனிப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் நவரத்ன பண்டா…

36 ஆயிரம் மெட்ரிக் தொன் பசளையுடன் இலங்கைக்கு வந்தடைந்த கப்பல்!

சேற்றுப் பசளை என்றழைக்கப்படும் செறிவூட்டப்பட்ட பொஸ்பேட் அல்லது TSP பசளை ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனத்தின் உதவியின் கீழ், குறித்த பசளை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில்…

வெளிநாட்டு கடன் வழங்குநர்களுக்கு ரணில் அனுப்பியுள்ள பகிரங்க கடிதம்!

கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீளமைப்பதற்கும் முழுமையான வெளிப்படைத்தன்மையை இலங்கை பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு கடன் வழங்குநர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளார். இருதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கு இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் அரச…

தொழிற்சங்கப் போராட்டத்தினால் நான்கு பில்லியன் ரூபா நட்டம்!

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகம், ரயில்வே, தபால், இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாட்டுக்கு நான்கு பில்லியன் ரூபா…

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் விசேட அறிவிப்பு

அரச வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பன வழமை போன்று செயற்படுவதாக அதன் பிரதானிகள் அறிவித்துள்ளனர். இலங்கை வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் சகல அலுவல்களும் வழமை போன்று நடைபெறுவதாக அதன் பொதுமுகாமையாளர் ரசல் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்றைய தொழிற்சங்க…

போலி காப்புறுதி முகவர்கள் குறித்து விசாரிக்குமாறு கோப் குழு கோரிக்கை!

2009ஆம் ஆண்டு போலி காப்புறுதி முகவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இதன் தற்போதைய நிலை என்னவென்பதை விசாரிக்குமாறு பொது நிறுவனங்களுக்கான கோப் குழு, இலங்கை காப்புறுதி நிறுவனத்திடம் கோரியுள்ளது.…