அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் சிலர் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருக்கின்ற அதே நேரம், சிலர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

நிமால் லான்சா, விஜயதாஸ ராஜபக்ச, அநுரபிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன உள்ளிட்ட பலர் அந்தக் கட்சியில் இணையவுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, மொட்டுவில் உள்ள மேலும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சி – மொட்டுக் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.