Category: இலங்கை

கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக இடம்பெற்றது. கல்முனை காணி மாவட்ட பதிவகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரும் மேலதிக காணி பதிவாளருமான திரு. K. சிவதர்ஷன் தலைமையில் இந்நிகழ்வு அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் கல்முனை மாநகர…

சோள பயிர்ச்செய்கைக்கான யூரியா உரம் விநியோகம்

பெரும்போகத்தில் சோள பயிர்ச்செய்கைக்கு அவசியமான யூரியா உரத்தை, மொனராகலை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் முதலான மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த 3 மாவட்டங்களுக்கும், ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரம் விநியோகிக்கப்படுவதாக விவசாயம், வனஜீவராசிகள் மற்றும்…

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நீராட்ச் சென்றவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நீராட்ச் சென்றவர்களில் இருவர் சடலமாக மீட்பு! மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு உன்னிச்சை குளதில் நண்பர்களுடன்…

சாய்ந்தமருது கடலில் மிதந்த சடலத்தை மீட்ட கல்முனை கடற்படை

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவியுடன் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) காலை இனம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றைய தினம் மீனவர்கள்…

அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக சாய்ந்தமருது நகர சபையை கேளுங்கள் : தே.கா தலைவர் அதாவுல்லாவுக்கு அறிவுரை !

நூருல் ஹுதா உமர் அண்மையில் நியமிக்கப்பட உள்ள அமைச்சரவையில் அமைச்சு பதவியை பெறுவதற்கு பதிலாக நம்பி வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ள நகர சபையை அரசிடம் கேட்டு பெற்றுக்கொடுங்கள். பெற்றுக்கொடுக்க முடியவில்லை எனில் தனது எம்பி பதவியை இராஜினாமா செய்து…

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்றிரவு காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக தனது 41ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீர் சுகயீனம் காரணமாக நேற்றிரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் முன்னணி நடிகராகத்…

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர்ந்த உறவுகளினால் சிறுவர் தின நிகழ்வுகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள மல்வத்தை புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலை அதிபர் திரு எஸ். சிவயோகராஜா மற்றும் பிரதி அதிபர் ஏ.எல்.சர்ஜீன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் புலம்பெயர்ந்த வாழும் ஜேர்மனியில்…

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிடப்பட வேண்டிய 9 லட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணபங்கள் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து…

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் – வெளியாகியுள்ள தகவல்

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவிக்கின்றார். அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என…

தேசிய பேரவையின் முதலாவது கூட்டம்

தேசிய பேரவையில் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால…