Category: இலங்கை

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு: தவிசாளரின் அதிரடி நடவடிக்கையால் தப்பிய விவசாயி!

பாறுக் ஷிஹான் தராசில் முறைகேடு செய்த நெல் கொள்வனவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு; விழிப்புடன் இருக்குமாறு பிரதேச சபை வேண்டுகோள்! திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை, திருக்கோவில் பிரதேச சபையின்…

சம்மாந்துறை மக்களின் சுகாதாரத் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்: RDHS உடனான சந்திப்பின் போது தவிசாளர் மாஹிர் கோரிக்கை!*

சம்மாந்துறை பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாகத் தீர்க்குமாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று 482 பேருக்கு கட்புரை சத்திரசிகிச்சை.

( மின்மினி மின்ஹா ) கிழக்கு மாகாணத்தின் மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகக் கருதப்படும் மாபெரும் இலவச கட்புரை சத்திரசிகிச்சை முகாம், இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் “Gift of Vision” (பார்வைப் பரிசு) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை…

அரச மருந்து கலவையாளர்களின் பொதுக் கூட்டத்தில் மோகன் கௌரவிப்பு!

( வி.ரி. சகாதேவராஜா)அரச மருந்து கலவையாளர்களின் சங்க வருடாந்த பொதுக் கூட்டத்தில் இவ் வருடம் ஓய்வுபெற்ற சேவையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் சங்கத் தலைவர் உதேனி திஸாநாயக்க தலைமையில் நேற்று குருநாகலில் இடம்பெற்றது. அச் சமயம், கல்முனை…

டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது!காணொளி ஆதாரங்கள் மூலம் அதிரடி நடவடிக்கை; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பாறுக் ஷிஹான் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு…

திருக்கோவில் கல்வி வலய மாணவர்களுக்கு உளவள மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு செயலமர்வு.

(செல்வி வினாயகமூர்த்தி) திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பொத்துவில் கோட்டம் (தமிழ்ப் பிரிவு), திருக்கோவில் கோட்டம் மற்றும் ஆலையடிவேம்பு கோட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 220 மாணவர் தலைவர்களுக்கும், உளவளத் துணை ஆசிரியர்கள் மற்றும்…

இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் – சுவாமி நீலமாதவானந்தா ஜீ, ஒஸ்கார் ராஜனிடம் தெரிவிப்பு 

( வி.ரி. சகாதேவராஜா) “இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்லொழுக்கம், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக விழுமியங்களும் கற்பிக்கப்படுகின்றன” இவ்வாறு, மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ…

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து; மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் தாமதமாக வந்ததாக பொதுமக்கள் தெரிவிப்பு

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த உணவகத்தில் காலை வேளையில் திடீரெனத் தீ பரவியதையடுத்து, அங்கிருந்தவர்களும் பிரதேசவாசிகளும், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி…

மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகமும் இலங்கை அபேக்சாவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு நன்கொடை!

சிவகுமார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகம் மனிதநேய அடிப்படையில் இலங்கை அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து பல மில்லியன் பெறுமதிவாய்ந்த பொருட்களை இனாமாக வழங்கி வைக்கும் நிகழ்வு (30) மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர்…

கிழக்கிலங்கை முதன்மை உளவளத்துணையாளர் ஒன்றுகூடல்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதன்மை உளவளத்துணையாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது முதன்மை உளவளத்துணையாளர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற பவளகாந்தன் மண்டபத்தில் 2026.08.01 சனிக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த…