Category: இலங்கை

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இந்த விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாடுகள்…

ஒலுவில் துறைமுகத்தில் ரின்மீன் தொழிற்சாலை!

உள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அம்பாறை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள ரின்மீன் உற்பத்தித்தொழிற்சாலையை தனியார் முதலீட்டாளர் ஊடாக புனரமைத்து மீண்டும் இயங்கச் செய்து உற்பத்தியை…

சம்மாந்துறையில் 45 நாட்களாக பாடசாலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள் – முறைப்பாடுகள் செய்தும் இதுவரை தீர்வில்லை; உண்ணாவிரதத்திற்கு தயாராகும் மாணவர்களின் பெற்றோர்கள்

(எம்.வை.அமீர், ஏ.எல்.எம். ஷினாஸ் , எம்.ஐ.எம்.சம்சுத்தீன், ஏ.எல்.அன்சார்) அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஜமாலியா வித்யாலயத்தில் கல்வி கற்கும் ஒன்பது மாணவர்கள் கடந்த 45 நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாமல் தமது கல்வியை இழந்த நிலையில் நிர்கதியாகியுள்ளனர். இந்த மாணவர்களின்…

லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடான், அதன் புதிய விலையாக 2,112 ரூபா…

தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா சிங்கள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்

தமிழர்களுடைய அரசியல் தீர்வை அங்கீகரிப்பதற்கு சிங்கள தேசம் தயாராக உள்ளதாக என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள்சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (03) திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தியின்…

நாளை யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய எழுச்சிப் பேரணியில் அணி திரள அழைப்பு

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி நடைபெறவுள்ள பேரணியில் மாணவர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் என அனைவரும் அலை அலையாக இணைத்து தமிழ் தேசத்தின் நிலைப்பாட்டினை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்துமாறு அன்புரிமையுடன்…

வலி. வடக்கில் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு!

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், குறித்த காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.…

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயது இளம் போதை வியாபாரி கைது

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு நகர் பகுதி அரசடியைச்சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி ஒருவரை 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை (ஜனவரி,1) பிற்பகல் ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கைது…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின்…