Author: Kalmunainet Admin

இன்றும் (04) தபால் மூல வாக்களிப்பு!

பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்றாகும் (04). இதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாதவர்கள், முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும்…

கருணா – பிள்ளையான் தரப்பிடையே மோதல்: 3 பேர் படுகாயம்

மட்டக்களப்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின்(Vinayagamoorthy Muralitharan) (கருணா) கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக…

அம்பாறையில் இராணுவ அதிகாரியையும் வேட்பாளராக களமிறக்கியுள்ள தமிழரசுக்கட்சி :காரைதீவில் ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பினார் சங்கு வேட்பாளர் புஸ்பராசா

அம்பாறையில் இராணுவ அதிகாரியையும் வேட்பாளராக களமிறக்கியுள்ள தமிழரசுக்கட்சி :காரைதீவில் ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பினார் சங்கு வேட்பாளர் புஸ்பராசா தமிழரசுக்கட்சி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் கறி வேப்பிலையாகவே உபயோகித்து வருகின்றார்கள்.பல்வேறு இன்னல்களை மாற்று இனத்தவரால் அம்பாறை மாவட்ட…

சாரதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் அறிவித்தல்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். பாதைகள் தற்போது வழுக்கும்…

முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பாம்!

முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்திடம் பணம்…

தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்து நாடாளுமன்ற ஆசனத்தை காப்பாற்றுங்கள் – வேட்பாளர் இந்துனேஸ்

அம்பாறைக்கு ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும் என்றால் தமிழரசு கட்சிக்கு மட்டும் தான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் இலக்கம் இரண்டில் (2) போட்டியிடும் கந்தசாமி இந்துனேஷ் தெரிவித்தார் . திருக்கோவில் பிரதேசத்தில்…

கல்முனை பகுதியில் வீசப்பட்டுள்ள துண்டு பிரசுரம்!

கல்முனை பகுதியில் வீசப்பட்டுள்ள துண்டு பிரசுரம் கல்முனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் துண்டுப்பிரசுரம் ஒன்று பரவலாக வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த துண்டு பிரசுரத்தில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் அருள்ஞானமூர்த்தி நிதான்சனுக்கு எதிரான கருத்துக்களும் உள்ளன. குறித்த துண்டு பிரசுரம் சமூக ஊடகங்களில் உலாவுகிறது.

சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை!

சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றும் தரமில்லாத இவ்வாறான பொருட்கள் உள்நாட்டு சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த விடயங்களை…

பாண்டிருப்பு பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்து!

பாண்டிருப்பு பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்து! பிரபா பாண்டிருப்பு பிரதான வீதியில் முற்சக்கர வண்டியும் ,மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்த நபர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல்! வி.சுகிர்தகுமார் திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் இன்று (02) ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சிலர் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் குறித்த…