Author: Kalmunainet Admin

அலங்கார பேருந்துகள் முற்சக்கர வண்டிகளுக்கு எதிராக கடும் கட்டுப்பாடு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிமாக பொருத்தப்படும் அலங்கார பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவற்றை அகற்றாவிடின்…

கல்லாறு பிருந்தாவனம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

உதவும் பொற்கரங்கள் அமைப்பின்(கனடா) ஸ்தாபகரும்,சமூக சேவகருமாகிய விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பூரண நிதி அனுசரனையில்கல்லாறு பிருந்தாவனம் பாலர் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு நேற்று 07.01.2025 இடம் பெற்றது.

கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை விநியோகம் செய்த சந்தேகத்தில் பாண்டிருப்பில் ஒருவர் கைது

கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை விநியோகம் செய்த சந்தேகத்தில் பாண்டிருப்பில் ஒருவர் கைது பாறுக் ஷிஹான் கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது…

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்!

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்! சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய…

2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச இருதய சிகிச்சை (Cardiac Cath Interventions) : இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக்கூடம் மட். கிகிரான்குளத்தில் திறந்து வைப்பு: இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்!

2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச இருதய சிகிச்சை (Cardiac Cath Interventions) மற்றும் இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக்கூடம் மட். கிகிரான்குளத்தில் திறந்து வைப்பு: இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்! மட்டக்களப்பு கிராக்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை…

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தன் மூலம்“ இதனை மேம்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வி நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின்…

வடக்கில் தொடரும் எலிக்காச்சல் அபாயம் -டுநிவழளிசைழளளை) பக்றிரீயா  என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி (Leptospirosis) பக்றிரீயா என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும்…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் கல்முனையில் திறந்து வைப்பு

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை “தாராள உள்ளங்கள் அறக்கட்டளை”யின் புதிய அலுவலக திறப்புவிழா கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு அறக்கட்டளையின் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ்…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து!

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து! கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக சற்று முன்னர் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒரே திசையில் பயணித்த ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஒரு முச்சக்கர…

மனித மெட்டாப் நியூமோ அல்லது HMPV வைரஸ் தொடர்பாக..பேராசிரியர் சந்திம ஜீவந்தர

மனித மெட்டாப் நியூமோ அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சீனாவில் புதிய சுவாச நோய்த்தொற்றுகள் குளிர்காலத்தில் மிகவும்…