நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காஸ்கி மாவட்ட உதவி தலைமை அதிகாரி குருதத்தா தாகல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை விமானம் தரையிறங்க 10 முதல் 20 வினாடிகள் மட்டுமே இருந்ததாக போக்கரா சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

.