தற்போதைய அமைச்சரவை இன்னும் சில தினங்களில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தற்போதைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாக 12 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ரிசாத் பதியூதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான் ஆகியோரே புதிய அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படவுள்ளனர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் 30 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.