Month: March 2023

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ…

இலங்கையில் வங்கி வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மத்திய வங்கியினால் தற்போது பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி பிரிவு கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் சவாலை நிறைவேற்ற இதே முறை பின்பற்றப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவு

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (02.03.2023) காலை 6.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது. பெசிசிர் செலாடன்(தென் கடற்கரை) மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே…

அமெரிக்கா, கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கம்!

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இறுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ராஜபக்சர்களின் பல சொத்துக்கள் ஆப்பிரிக்காவில் உள்ளது. அவையும் தற்போது இறுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தியாவின் இராணுவத்தின் முன்னாள் மேஜர் தர அதிகாரி மதன்குமார் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து…

சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி இளைப்பாறும் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

அபு அலா சமூக சேவையாளர் சரவணமுத்து யோகநாயகத்தின் 4வது ஆண்டு ஞாபகார்த்த நினைவையொட்டி திருகோணமலை இலுப்பைக்குள பிரதேச சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி 4 இலட்சம் ரூபாய் நிதியில் நீர்மானிக்கப்பட்ட இளைப்பாறும் கட்டடம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீரென எவ்வாறு அதிகரித்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென அதிகரித்துள்ளது. இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளுக்கு வெளிநாட்டு நிறுவனமொன்றிலிருந்து 400 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டமையே ரூபாய் பெறுமதி அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து…

இலங்கையர்கள் 1, 50,000 பேரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையர்கள் 1, 50,000 பேரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் கிரிஷான் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் வலிப்பு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

பயங்கவாத தாக்குதல் வழக்கிலிருந்து ஜனாதிபதி விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத்…

2 ரயில்கள் மோதியதில் 32 பேர் பலி; 85 பேர் படுகாயம்

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், கிரீஸில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது என கிரீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நகரங்களுக்கு இடையேயான எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலும் சரக்கு…

மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இதன் நீளம்: 71.15 ஆகும், நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால்…