Category: பிரதான செய்தி

வடக்கு, கிழக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் பதவியேற்றனர்!

வடக்கு, கிழக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று பதவியேற்றனர்! வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். வடமேல் மாகாண…

நாட்டில் ஆபத்தான கோவிட் திரிபு பரவுகிறதா..! பரிசோதனை ஆரம்பம்

நாட்டில் பரவி வரும் கொவிட் வைரஸின் தற்போதைய மாறுபாட்டை கண்டறியும் சோதனை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,…

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(16.05.2023) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,…

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் சந்திப்பு தொடர்பாக!

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் நேற்றைய சந்திப்பு தொடர்பாக! உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதைவிடுத்து நிர்வாக விடயம் சம்பந்தமான பேச்சுக்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது பிரயோசனமற்ற செயல்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்…

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று பங்காளதேஷின் டக்கா நகரில் நடைபெற்றுள்ளது. ‘இந்தியா பவுண்டேசன்’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடலின்போது இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும்…

மூன்று ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்கினார் ஜனாதிபதி!

மூன்று ஆளுநர்களை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கினார் ஜனாதிபதி! வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17) நியமிக்கப்படவுள்ளனர் . ஜனாதிபதி செயலகம் இதனை அறிவித்துள்ளது.

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சு இன்று நடைபெறவுள்ளது.கடந்த 11ஆம் திகதி வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் முதல் சுற்று சந்திப்பு…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களினால் நாட்டிற்கு வந்து குவியும் டொலர்கள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

2023 ஏப்ரல் மாதத்திற்கான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார். தமது டுவிட்டரில் பதிவிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க டொலர்…

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மே, 15ஆம் திகதி முதல் நடுமறைக்கு…

ஜனாதிபதியுடனான சந்திப்பு – இந்தியாவிடம் விபரித்தார் சம்பந்தர்!

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான முழு விவரங்களையும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கு எடுத்துரைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.…