Category: பிரதான செய்தி

இலங்கை – நேபாளத்திற்கு 1 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உயிரிழப்புகள் மற்றும் பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள அரசுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவி வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு…

இலங்கையில் எல் நினோ தாக்கம் தீவிரமடையும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைக் காலத்தில் வலுப்பெற்று வரும் எல் நினோ நிலை, அதிகரித்துள்ள எரிபொருள் மற்றும் உரச் செலவுகள், அத்துடன் சாத்தியமான அதிக மழைவீழ்ச்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய…

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தலை இயன்றளவு விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த…

இன்று பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு ; 71 பேர் உயிரிழப்பு ; மக்கள் அவதானம்

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்…

சுகாதார சீருடை விவகாரம் இனவாதமாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது – அமைச்சர்

சுகாதார சேவையாளர்களின் சீருடை விவகாரம்: நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையே அமுலில் இருக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், அதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க முடியும் என…

சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்க அரசு முடிவு!

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட (Budget) முன்மொழிவுகளுக்கு அமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கென…

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எரிக் மேயர் (Eric Meyer) அதிகாரப்பூர்வமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்க துணை வெளியுறவுத்துறை செயலாளர் லாண்டாவ் (Landau) முன்னிலையில்…

இன்று ஆடி அமாவாசை ; திதி/ தர்ப்பணம் என்றால் என்ன?

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா (12.08.2026- புதன்கிழமை) இவ் வருடத்திற்கான ஆடி அமாவாசை தீர்த்தம் இன்று 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கிழக்கில் முக்கியமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் திருக்கோயில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் போன்ற ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான…

பிரதி பொலிஸ் மா அதிபராக ஷானி அபேசேகர

நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்,…