ஜப்பானில் அமோரி மாகாணத்தில் உள்ள பண்ணையில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக இப்பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக, குறிப்பிட்ட பண்ணையில் இருந்த சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பறவைக்காய்ச்சல் தீவிரம்

அத்துடன் குறிப்பிட்ட பண்ணை முற்றாக கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பண்ணையைச் சுற்றிலும் உள்ள சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த சில மாதங்களாக பறவைக்காய்ச்சல் தீவிரமடைந்ததன் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.