தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட உரையாற்ற உள்ளார்.

இன்றைய தினம் (04.02.2023) மாலை நாட்டு மக்களுக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது.

இம்முறை தேசிய தின நிகழ்வுகளின் போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு எவ்வித உரையையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் மாலை 6.45 மணிக்கு ஜனாதிபதியின் விசேட உரை ஊடகங்களின் வாயிலாக ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.