(கனகராசா சரவணன்)

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 65 பேரையும் மே 30 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் ஒருவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (31) திகதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 66 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்குல் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்னர்.

இதில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய வழக்கில் இருந்து 3 பேரை விடுவித்ததுடன் 63 பேரில் 62 பேரை கட்டம் கட்டமாக பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் குற்றம் சாட்டப்பட்ட 20 நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்களை அடுத்த வழுக்கு தினமான மே 30 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் தொடர்ந்து ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 65 பேரையும் மே 30 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் ஒருவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (31) திகதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 66 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்குல் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்னர்.

இதில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய வழக்கில் இருந்து 3 பேரை விடுவித்ததுடன் 63 பேரில் 62 பேரை கட்டம் கட்டமாக பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் குற்றம் சாட்டப்பட்ட 20 நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்களை அடுத்த வழுக்கு தினமான மே 30 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் தொடர்ந்து ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.