செல்வ வரி அறவிடும் திட்டத்தில் மாற்றம்?

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த, செல்வ வரியை 2025 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்கப்படுவதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக, 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செல்வ வரியை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்திருந்தது.

எனினும், இலங்கை அரசாங்கம் நடத்திய ஆய்வில், உலகின் எந்தவொரு நாட்டிலும் தற்போது செல்வ வரி நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

செல்வ வரி
எனவே, இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த ஒரு மாதிரித் திட்டத்தை வழங்குமாறு இலங்கை ஏற்கனவே நாணய நிதியத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.

மாதிரித் திட்டத்தை பெற்ற பிறகு, செல்வ வரி 2025ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று கருதப்படுவதாக தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

நன்றி -தமிழ் வின்