இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று பங்காளதேஷின் டக்கா நகரில் நடைபெற்றுள்ளது.

‘இந்தியா பவுண்டேசன்’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின்போது இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்புக்கள்

மேலும், இந்து சமுத்திரப் பிராந்திய விடயங்களில் தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்புக்கள் தொடர்பாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையைப் பொறுத்தளவில் வடக்குக் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் வாழும் அதிகளவான ஈழத்தமிழர்களின் பங்களிப்புத் தொடர்பிலும் இக்கலந்துரையாடலின்போது இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி கருத்தரங்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய உயர் அதிகாரி ராம் மாண்டவ் மற்றும் பல நாடுகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You missed