நாட்டின் பல பகுதிகளில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காலி, மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் 19 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வுப் பிரிவு

மேலும் 229 பேர் எலிக்காய்ச்சலுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.