(கனகராசா சரவணன்)

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சோந் 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் தந்தையார் இன்று திங்கட்கிழமை (26) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.

வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின் தாயாரும் சொறிகல்முனையைச் சேர்ந்த தந்தையாரும் விவாகரத்து செய்துள்ள நிலையில் தீபன் சயான் என்ற 13 வயது சிறுவன் தந்தையாருடன் இருந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) வீரமுனை பகுதியில் மரணவீடு ஒன்றிற்கு தந்தையார் சிறுவனை அழைத்துச் சென்ற நிலையில் சிறுவன் காணாமல் போயுள்ளதையடுத்து சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.