தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும், பொருளாதாரம் பின்னடைவை அடைந்துள்ள இந்த நிலையிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

இந்த போராட்டம் இன்று (11.02.2023) யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் கலாச்சார பண்பாட்டை சீரழிக்காதே, எம் தேசத்து தெய்வங்கள் உறங்கும் இடத்தை நாசன் செய்யாதே போன்ற கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் வேலன்சுவாமிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You missed