துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த 9 பேரில் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

மேலும் அவர் தொடர்பில் இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்தார்.