பாறுக் ஷிஹான்
முஷாரப் இணைவு நிகழ்வை புறக்கணித்த அம்பாறை மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையில் சுயேட்சையாக களமிறங்கி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஷாரப் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபை எழு (07) உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்ளும் நிகழ்வு
இன்று (25) சாய்ந்தமருது தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான பொத்துவில் இறக்காமம் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வும் சத்தியபிரமாண செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பட்டியல் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்த கொண்டனர்.எனினும் குறித்த கூட்டத்தை பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தலைவர் வாஸித் புறக்கணித்துள்ளார்.
அவருடன்இ பொத்துவில் பிரதேச சபைக்கு தெரிவான முகாவின் 5 உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழு தலைவர் என பலரும் புறக்கணித்துள்ளனர்.
முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது அதிகமான விமர்சனங்களை முன்வைத்தது மாத்திரமின்றி றவூப் ஹக்கீமை தாறுமாறாக பேசி இருந்தமையும்இ கடந்த கோட்டாவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளின் போதுஇ இவர் துணை நின்றதுதுடன் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அனைத்து செயற்பாடுகளின் போதும் அதிகமாக ராஜபக்ஷ தரப்புடன் இருந்து சுக போகங்களை அனுபவித்த முஷாரப்பை முஸ்லிம் சமூகம் அதிகம் விமர்சித்திருந்தமையும் இவரின் இணைவு மீதான புறக்கணிப்பாக பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம் சமூகத்தினரால் விமர்சிக்கப்பட்ட் முஷாரப் போன்றவர்களை மக்கள் நிராகரித்த போதும்இ முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பொத்துவில் சபையின் அதிகாரத்தை தான் கைப்பற்றி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். என்ற நற்பாசையில் அந்த ஊர் போராளிகளின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளாமல் ரவூப் ஹக்கீம் எடுத்த இந்த செயற்பாட்டால் மத்திய குழு உள்ளிட்ட போராளிகள் அதிருப்தியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தை புறக்கணித்த ஐந்து பேரும் எதிர்வருகின்ற 27 ஆம் திகதி தவிசாளராக தெரிவு செய்யப்படவிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களை ஆதரிப்பார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.இந்தக் கூட்டத்தை புறக்கணித்த ஐந்து பொத்துவில் பிரதேச உறுப்பினர்களும் எதிர்வருகின்ற 27 ஆம் திகதி தவிசாளராக தெரிவு செய்யப்படவிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களை ஆதரிப்பார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.இந்த ஐந்து பேரில் ஒருவரை தவிசாளராக்குவதற்கு சபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக 10 பேர் கொண்ட உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழு தயார் செய்து வைத்துள்ளதாக அறிய முடிகிறது.
முஷாரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைவு நிகழ்வை புறக்கணித்த அம்பாறை மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள்
