நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதானப்பணி முன்னெடுப்பு!

இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான கதிர்காம ஆலயத்திற்கான காட்டுவழி பாத யாத்திரை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர் இதன் போது பல்வேறு அமைப்புக்கள் தாகசாந்தி, அன்னதான பணிகளை முன்னெடுப்பது வழமை. அந்த வகையில் நற்பிட்டிமுனை வேலன் தொண்டர் படையும் யாத்திரிகர்களுக்கான அன்னதானப்பணியினை முன்னெடுத்திருந்மனர்.

வேலன் தொண்டர் படையால் நற்பிட்டிமுனை மக்கள் சார்பாக எதிர்வரும் 23 , 24 , 25 ஆகிய மூன்று தினங்களில் உகந்தை மலை முருகன் ஆலயத்தில் மாபெரும் அன்னதான பணியை முன்னெடுத்துவருகின்றனர்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.