கொழும்பு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐவரும் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழையின் போது வீசிய பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
