தற்போது ஆசியாவின் சில பகுதிகளில் பரவி வரும் இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 என்பன இலங்கையிலும் இருப்பதை, இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைததிய நிபுணர் ஜூட் ஜயமஹா கூறியுள்ளார்.


கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள்மற்றும் நாள்பட்ட நோய் வாய்ப்பட்ட நோயாளர்கள் பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால்,
முகக்கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் சுகாதார அதிகாரிகள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.


கொவிட் வைரஸின் புதிய திரிவுகள் அவ்வப்போது பரவுவதுடன், இது தொடர்
பாக சுகாதாரத்துறை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால் தேவையற்ற அச்சம்
கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் சமீபத்தில் இறந்த ஒன்றரை
மாதக் குழந்தையும் புதிய கொவிட்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது என்று
அடையாளம் காணப்பட்டுள்ளது.


குழந்தையின் உயிரியல் மாதிரியைக் கொழும்பு வைத்திய ஆராய்ச்சி
நிறுவனத்துக்குப் பரிசோதனைக்காக அனுப்பிய பின்னர் இது உறுதிப்படுத்
தப்பட்டது என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார