Month: November 2022

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளி அடையாளம்

நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த முதலாம் திகதி இலங்கை வந்தடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லுதல் இடை நிறுத்தம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்ற பெண்கள், தொழில் கிடைக்காமல் துன்புறுத்தலுக்கு ஆளானமை,…

இலங்கைக்கு 4.7 டொன் அவசர மருத்துவப் பொருட்களை வழங்கியது கத்தார்

இலங்கைக்கு 4.7 டொன் அவசர மருத்துவப் பொருட்களை அபிவிருத்திக்கான கட்டார் நிதியம் (The Qatar Fund for Development) அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த உதவியை கட்டார் நாட்டின் இலங்கைத் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி அல்-சோரூர் மற்றும் இலங்கைக்கான சுகாதார…

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் மீது துப்பாக்கி சூடு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குஜ்ரன்வாலாவில் (Gujranwala) நடைபெற்ற பேரணியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்ரான் கானின் காலில் துப்பாக்கிச் சூடு பட்டதாகவும், அவருக்கு ஆபத்தில்லை என்றும், அவர்…

மீண்டும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

லங்கா சதொச விற்பனையகங்களில் முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு, வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா கோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு…

நாட்டை சாம்பல் மேடாக்கிய மொட்டுவின் வீராம்பு

Editorialபரிமாணம் மொட்டுக் கட்சியின் வீராம்பு நாட்டை சாம்பல் மேடாக மாற்றியவர்கள் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் முயற்சிகளில் இப்பொழுது இறங்கி இருக்கின்றார்கள்.மக்களால் விரட்டியடிக்கப்பட்டு ஓடி ஒழித்தவர்கள், மீண்டும் அரசியலில் வரிந்து கட்டிக்கொண்டு நாட்டின் பல பிரதேசங்களிலும் கால் பதிக்கின்றார்கள். மகிந்த ராஜபக்ச தலைமையிலான…

10.6லீட்டர் மில்லியன் டீசலை சீனா இலவசமாக வழங்குகிறது

இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா 10.6 மில்லியன் லீட்டர் டீசலை கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரக தகவல்படி, இந்த டீசல் தொகையை ஏற்றிய கப்பல் 2022 நவம்பர் மற்றும்…

கல்முனையில் முஸ்லிம் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளால் காணாமல் போகும் இன ஒற்றுமை!

பரிமாணம் – சிறப்பு கட்டுரை கல்முனையில் முஸ்லிம் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளால் காணாமல் போகும் இன ஒற்றுமை! ✍️கட்டப்பன் தமிழர்கள் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து சிறுபான்மை இனங்கள் மீட்சிபெற இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து போராடி வருகிறார்கள். இதன் காரணமாக இக்கால கட்டங்களில்…

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாதாம் என்கிறார் -ஹரீஸ்

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது; -எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.தெரிவிப்பு (செயிட் ஆஷிப்) கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு…

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 77 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 77 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்;தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சாயிசமித்தி நிலையத்தின் மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்;தின் தலைவர்…