கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அமைதிப்போராட்டம் இன்று (09.04.2024) 16 ஆவது நாளாக தொடர்கிறது.
இந்த அடிப்படை உரிமைக்கான அமைதிப்போராட்டம் கடந்த 25.03.2024 அன்று ஆரம்பமாகியது . அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டதை தவிர ஆக்கபூர்வமாக எதுவும் செய்ததாக இல்லை. சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கூடாரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் போராடி வருகின்றமை மிகவும் வேதனையான விடயமே.
இப்போராட்டத்துக்கு பல்வேறு பொது அமைப்புக்களும் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து பங்குபற்றி ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இன்றைய தினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உறுப்பினர்களும் பங்குபற்றி ஆதரவை வழங்கியிருந்தனர்..
தன்னார்வமாக பெருமளவான பொதுமக்கள் மதகுருக்கள் சிவில் அமைப்புக்கள் பங்குபற்றி கல்முனை வடக்கு பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்புடைய செய்தி
https://www.kalmunainet.com/archives/95272
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/04/432967424_1290633022326200_759170805313506457_n-1024x768.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2024/04/434834520_1290633712326131_1316829256853879291_n-1024x768.jpg)