நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதி
களிலும் வெப்பநிலை மேலும்உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்,
கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாகக்காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிகஉயர்வாகக் காணப்படும்என்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறி
வித்துள்ளார் .

இது தொடர்பில் அவர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குபின்னரும் காலை 7.00மணிக்கு முன்னரும் மிதமான மழைகிடைக்கும் வாய்ப்புள்ளது.

பகல் காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை பகல் பொழுது வெப்பநிலை 41 பாகை செல் சியஸ் இனை அண்மிக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

ஆனாலும்,இம்மழை அதிகரிக்கும் வெப்பநிலையின்பாதிப்புக்களை தற்காலிகமாக தணித்து குறுகிய காலத்திற்கு மட்டுமே சௌகரியமான வானிலையை உருவாக்கும்.

முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்.எனவே, அதிகரிக்கும் வெப்பநிலை, வெப்ப அலை தொடர்பிலும்எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது.

அதிகரித்த வெப்பநிலையைக் கருத்தில்கொண்டு எமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வது உசிதமானது.’ – என்றுள்ளது.