இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரை தமிழ் தேசியக் கட்சியினர் கூட்டாக சந்தித்தனர்!

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று(22.01.2024) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது தமிழர் பகுதியில் தொடரும் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு, மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை, அதிகாரம் பகிரப்படாமை, போன்ற விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறீதரன், சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், சாணக்கியன் , சார்ள்ஸ் நிர்மலநாதன், விநோ நோகராதலிங்கம், மற்றும் மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.