வீதியால் சென்ற திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் சில முஸ்லீம்கள் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

(கனகராசா சரவணன்) 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு யாழ்ப்பாணம் நோக்கி பொத்துவில் ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை அக்கரைப்பற்றில் வீதியை  சில முஸ்லீம்கள்  மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது

தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு 15ம் திகதி தொடக்கம் 27 ம் திகதிவரையில் திலீபன் வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளரும் நா.உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் பொத்துவில் இருந்து யாழ் நல்லூர் திலீபன் பூங்கா வரையிலான அவரின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்டது .

இந்த நினைவேந்தலில் வணபிதா சக்திவேல், நா.உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.  கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி காண்டீபன், மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அன்னாரது உருவப்படத்தின் முன்னாள் ஈகை சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி வாகன ஊர்தியை ஆரத்பித்து வைத்தனர்.

பொத்துவில் இருந்து திருக்கோவில் வரையுமுள்ள கோமாரி, ஊறணி, சங்கமம்கண்டி திருக்கோவில் வரையும் வீதிகளில் வாகன ஊர்தியை காத்திருந்த மக்கள் அதனை வீதிகளில் மறித்து திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து  கல்முனையை நோக்கி அக்கரைப்பற்றின் ஊடாக மாலை 5 மணியளவில் பயணித்து வாகன ஊர்;தியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் திடீரென 7 பேர் கொண்ட ஒரு முஸ்லீம் குழுவினர் வீதியால் சென்ற வாகன ஊர்தியை வழிமறித்து சிங்க கொடியுடன்; புலிகளின் மிருகத்தனமான சித்தாந்தங்களை எமது கிழக்கு மாகாண அமைதியான சமூகத்திற்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம்,

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக புலிகளின் கொடூர கொலைகளை வன்மையாக கண்டிக்கின்றோம், அக்கரைப்பற்று முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் நடாத்திய அட்டூழிங்களுக்கு எதிராக விசாரணை நடாத்துமாறு சர்வதேசத்தையும் யு.என்.எச்.சி.ஆர், வலியுறுத்துகின்றோம் என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு துசனவார்த்தைகள் பேசியவாறு சுமார் 5 நிமிடம் ஆhப்பாட்டத்தில்; ஈடுபட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.    

இதனையடுத்து அங்கு வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில் வாகன ஊர்தி அங்கு ஒர் இரு நிமிடம் நிறுத்தி என்ன செய்வது என்ற நிலையில்; வீதியின் அடுத்த பகுதியால் வாகன ஊர்தியை வாகன சாரதி செலுத்தியதையடுத்து ஆர்பாட்டகாரர்களால் ஓன்றம் செய்ய முடியாத நிலையில் அதன் பின்னால் சென்ற வாகன அணி பயணத்தை மேற்கொண்டு கல்முனை பாண்டிருப்பு சென்றடைந்தனர்.

அங்கு வீதியில் ஊர்தியை காத்திருந்த மக்கள் ஊர்தியை மறித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதையடுத்து அம்பாறை மாவட்ட ஊர்தி  பவணியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் இன்று சனிக்கிழமை இரண்டம்நாள் கஞவாஞ்சிக்குடியில் வாகன ஊர்தி ஆரம்பித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு சென்று அங்கிருந்து வாகரை ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளது