நடிகர் மாரிமுத்து 57 வயதில் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்

வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை கிராமத்தைச் சேர்ந்த அவர், கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், எதிர்நீச்சல் தொடர்மூலம் பிரபலமான கவனத்தைப் பெற்றார்.