எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 340 ரூபா

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 375 ரூபா

அத்தோடு, ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 405 ரூபாவிலிருந்தது 80 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 325 ரூபா

ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 510 ரூபாவிலிருந்து 45 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 465 ரூபா

மண்ணெண்ணெய் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 305 ரூபாவிலிருந்து 295 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.