எமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 75வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் கணக்காளர் M.கேந்திர மூர்த்தி, தாதிய பரிபாலகி திருமதி L சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு T. தேவஅருள் மற்றும் விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள் பொறுப்பு உத்தியோகத்தர்கள் துணை மருத்துவ சேவைஉத்தியோகத்தர்கள், நிறைவுகான் தொழில் வல்லுனர் சேவை உத்தியோகத்தர்கள், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள், விடுதி மேற்பார்வை உத்தியோகத்தர்கள், சிற்றூழிய மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களும், ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr இரா முரளீஸ்வரன் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பாதுகாப்பு உத்தியோகத்தினால் அணிவகுப்பும் இடம்பெற்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரன் அவர்கள் தனது உரையில் உற்பத்தி திறன் விருதை தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட மையையும் அகில இலங்கை ரீதியில் எமது வைத்தியசாலை முதன்மை வகிக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டிய அவர் வைத்தியசாலையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் இக்கட்டான நிலையில் சிறந்த முறையில் கடமையாற்றுவதை பாராட்டியதுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு திருப்தியான சிறந்த சேவையை வழங்குவதற்கு ஆலோசனையும் வழங்கியிருந்தார்.

எமது நாட்டில் இடம்பெற்ற கொரோனா தொற்று நோய் நிலைமை மற்றும் எமது நாடு எதிர்கொண்டு நிதி நெருக்கடிகளின் போதும் சிறந்த முறையில் பணியாற்றியதைப் போன்று எந் நிலை வந்தாலும் அவற்றை வென்று சிறந்த வைத்திய சேவையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் தொடர்ந்து இதேபோன்று சிறந்த சேவைகளை நோயாளர்களுக்கு வழங்கி எமது பிரதேச வாழ் மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சுதந்திர தினத்தில் அனைவருக்கும் ஆசியையும் நன்றியையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாற்சோறும் வழங்கி இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

You missed