கல்முனை ஆதார வைத்தியசாலையில் கௌரவிப்பு நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

2020 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தி திறன் விருது தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்றமையை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு வைத்தியசாலையின் அத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் மதன் கணக்காளர் கேந்திரமூர்த்தி தாதிய பரிபாலகர்கள் திருமதி சுஜேந்திரன் திரு சசிதரன் நிர்வாக உத்தியோகத்தர் திரு தேவஅருள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.