உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு பொறுப்பேற்கும் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் (04) அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இதன்போது வேட்பு மனுவை பொறுப்பேற்கும் தினம் குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், நாளை மறுதினம் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க, தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

You missed