கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கல்முனையில் இடம் பெற்ற பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கு சனிக்கிழமை சேவைப்பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி பணிப்பாளர், பிரிவுத்தலைவர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுடன் வைத்திய அத்தியட்சகர்களும் பிரதேச வைத்திய அதிகாரிகளும் சுகாதார வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டு தமது பாராட்டுக்களை பதிவு செய்து நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.

நேர்மையான பணி செய்து  கொரோனா ஒழிப்புக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டமைக்காக பணிமனையினாலும் வைத்தியசாலைகளினாலும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர். எம் தௌபீக் அவர்கள் தேசிய கண் சிகிச்சை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.