திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக பணிப்பாளருடன் கலந்துரையாடல்!

( வி.ரி.சகாதேவராஜா)

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக்

குழு உறுப்பினர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ஷஹிலா இஸ்ஸதீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச் சந்திப்பு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  அலுவலகத்திலே நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதன்போது திருக்கோவில் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் அபிவிருத்தி குழுவினர் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

  தற்போது திறப்பதற்கு தயார்நிலையில் உள்ள  வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தை திறந்து வைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.

அதேவேளை, இயன் மருத்துவப் பிரிவு திறக்கின்ற தினம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 பசற்சிகிச்சை பிரிவானது தொடர்ந்து நீண்ட காலமாக வைத்தியர் வராமையினால் மூடிக் கிடப்பதனையும் மற்றும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான விடயங்களையும் இக்கலந்துரையாடலின்  போது பேசப்பட்டது.

 குறிப்பாக அண்மையில் வழங்கப்பட்ட தாதிய நியமனத்திலே தமது வைத்தியசாலைக்கு ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை, இருப்பினும் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிபுரையின் பேரிலே மூன்று தாதிய உத்தியோகத்தர்கள் திருக்கோவில் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் . எனினும் அவர்களை திருக்கோவில் வைத்தியசாலையில் தொடர்ந்து பணியாற்ற நியமிக்கப்பட   வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர் .

அதற்கு அமைவாகசெய்து தருவதாக அவர் உறுதியளித்தார்.

சந்திப்பு திருப்தி அளித்ததாக அபிவிருத்தி குழு உறுப்பினர் கண். இராஜரெத்தினம் தெரிவித்தார்.