கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு 10.06.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் ,பிரதம விருந்தினராக திருமதி சுஜாதா குலேந்திரகுமார் (மேலதிக செயலாளர் கொள்கை திட்டமிடல் மற்றும் செயல்திறன் மீளாய்வு) கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு இசுருபாய பத்தரமுல்ல) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு.ரி.ஜே அதிசயராஜ் ( பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு) ,ஆர் .இளங்குமுதன் (மாகாணப் பணிப்பாளர் கிராமிய அபிவிருத்தி திணைக்களம்) ,மற்றும்சிறப்பு விருந்தினர்களாக திரு உமா வரதராஜன் (சிரேஸ்ட எழுத்தாளர்) ,கவிஞர் சோலைக்கிளி ( சிரேஸ்ட எழுத்தாளர்) ,அப்துல் ரசாக் (மொழித்துறை விரிவுரையாளர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.