AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு! (photos)

கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான AGONY OF BEING HUMANE
நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று 2025.06.08 கல்முனை வடக்குப் பிரதேச செயலகக்
கேட்போர் கூடத்தில் கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்றது.

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதியுதவியுடன் இந்நூல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

கல்முனைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.சஞ்சீவி சிவகுமார் தலைமையில் இடம் பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக டாக்டர்.இரா.முரளீஸ்வரன்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மட்டக்களப்பு அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக திரு.சரவணமுத்து நவநீதன், பணிப்பாளர் -பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கி.மா. அவர்களும் திரு.தி.ஜே.அதிசயராஜ் பிரதேச செயலாளர் கல்முனை (வடக்கு) அவர்களும் கலந்து கொள்வதுடன் விசேட அதிதியாக எழுத்தாளர். உமா வரதராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

நூல் பற்றிய உரைகளை திரு.பு.ப.குணரெத்ன, ஆங்கில ஆசிரிய ஆலோசகர், சம்மாந்துறைக் கல்வி வலயம் அவர்களும் திரு.பா.சஜீந்திரன் பிரதி அதிபர் – உவெஸ்லி உயர்தர பாடசாலை, கல்முனை அவர்களும் நிகழ்த்தியதுடன் கவிஞர் அறிமுக உரையினை திரு.சிவ வரதராஜன் ஆஆற்றினார்.

திரு.ஆர். ராஜராஜேந்திரா அவர்கள் கவிதை வாசிப்பு ,திரு.க.ராஜதன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இன்தே நிறைவு பெற்றது.

நிகழ்ச்சித் தொகுப்பு திருமதி.மந்தாகினி ரங்கராஜன் , கஜானா சந்திரபோஸ்