காரைதீவில் களைகட்டிய கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில், கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் சனிக்கிழமை(16) நடைபெற்றது .
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார் .
கௌரவ அதிதிகளாக நிறுவனத்தின் நடனம் அரங்காற்றுகை திணைக்கள சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி , மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் அழகியகல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி மலர்விழி சிவஞானசோதிகுரு, ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .
அழைப்பு அதிதிகளாக கல்முனை வலய நடன ஆசிரிய ஆலோசகர் ரிகே.றீசா பத்திரண மற்றும் திருக்கோவில் ஆசிரிய ஆலோசகர் திருமதி.தங்கமாணிக்கம் சிறப்பித்தார்கள் .
நடனத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஐந்து மாணவிகளின் நடன ஆற்று கைகள் சிறப்பாக நடைபெற்றன.











